
ஹிமாச்சல பிதேசத்தின் சாம்பா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில்,
சாம்பா மாவட்டத்தில் காலை 11.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை.
முன்னதாக கடந்த ஜூன் 30ம் தேதி சாம்பா மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.