பிரதமர் மோடி நாளை(ஜூலை 7) சத்தீஸ்கர் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கரில் ரூ. 7,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கரில் ரூ. 7,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7, 8-ஆம் தேதிகளில் உத்தர பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

முதலாவதாக நாளை(வெள்ளிக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் பிரதமர் மோடி 6 வழிச்சாலை உள்ளிட்ட 5 தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 7,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். மேலும் சத்தீஸ்கரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார். 

மொத்தமாக 4 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.50,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் உத்தர பிரதேசம் தவிர்த்து இதர மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com