
பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் மனதளவில் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://t.co/nc12bnkNeh
â Jairam Ramesh (@Jairam_Ramesh) July 9, 2023
पहलॠसà¥à¤¨à¤¾ मà¥à¤ à¤à¤°à¥à¤¤à¥ हà¥à¤à¤° दà¥à¤¶ à¤à¥ सà¥à¤µà¤¾ à¤à¤°à¤¨à¤¾ यà¥à¤µà¤¾à¤à¤ à¤à¤¾ सपना हà¥à¤¤à¤¾ था।
यà¥à¤µà¤¾à¤à¤ à¤à¥ दà¥à¤¶ सà¥à¤µà¤¾ à¤à¥ सà¤à¤à¤²à¥à¤ª à¤à¥ à¤à¤à¥à¤à¤¼à¤¤ à¤à¤°à¤¤à¥ हà¥à¤ à¤à¤¨à¥à¤¹à¥à¤ बà¥à¤¹à¤¤à¤° सà¥à¤µà¤¿à¤§à¤¾à¤à¤ à¤à¤° नà¥à¤à¤°à¥ à¤à¥ सà¥à¤°à¤à¥à¤·à¤¾ दॠà¤à¤¾à¤¤à¥ थà¥à¥¤
à¤à¤à¥à¤¨à¤¿à¤µà¥à¤° यà¥à¤à¤¨à¤¾ à¤à¥ बà¥à¤¨à¤¿à¤¯à¤¾à¤¦ हॠà¤à¤¼à¤²à¤¤ हà¥à¥¤ à¤à¤¸à¤¨à¥ यà¥à¤µà¤¾à¤à¤ à¤à¥ दà¥à¤¶ सà¥à¤µà¤¾ à¤à¥ सपनà¥à¤ à¤à¥ तà¥à¤¡à¤¼ दियाâ¦
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கூறுவதை முன்பெல்லாம் வழக்கமாக வைத்திருந்தார்கள். இளைஞர்களின் இந்த தீர்மானத்தால் அவர்களுக்கு சிறப்பான வசதிகள் மற்றும் வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அக்னிபத் திட்டத்தின் அடிப்படையே தவறாக உள்ளது. இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை அக்னிபத் சிதறடித்துள்ளது. இந்த அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதன் முடிவுகள் அனைவருக்கும் முன்பாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







