நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நாட்டுக்கு சேவையாற்ற நினைத்த இளைஞர்களின் கனவை அக்னிபத் திட்டம் நொறுக்கிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2023, 1:40 pm IST

பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் மனதளவில் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற  வேண்டும் எனக் கூறுவதை முன்பெல்லாம் வழக்கமாக வைத்திருந்தார்கள். இளைஞர்களின் இந்த தீர்மானத்தால் அவர்களுக்கு சிறப்பான வசதிகள் மற்றும் வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அக்னிபத் திட்டத்தின் அடிப்படையே தவறாக உள்ளது. இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை அக்னிபத் சிதறடித்துள்ளது. இந்த அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்கள் பலவிதமான அச்சங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதன் முடிவுகள் அனைவருக்கும் முன்பாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.