தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே வெடிகுண்டு வீச்சு!

மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :11 ஜூலை 2023, 8:22 am

DIN

மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது முா்ஷிதாபாத், நாடியா, கூச் பெஹாா், தெற்கு 24 பா்கானாஸ், கிழக்கு மேதினிபூா் ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டைமண்ட் துறைமுகப் பகுதியில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், வன்முறையால் 696 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற தோ்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று(திங்கள்கிழமை) அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.