தில்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுமே காரணம் என ஆம் ஆத்மி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசும் தெரிந்தே தலைநகர் தில்லியை நோக்கி நீரை திறந்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கடற்கன்னிகள் உண்மையா? ஆஸி.யில் அரியவகை எலும்புகள்!!
இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது: கடந்த 3-4 நாள்களாக தில்லியில் மழை இல்லை. இருந்தும், யமுனையில் தண்ணீர் அளவு 208.66 மீட்டரை எட்டியுள்ளது. ஹத்னிகுந்த் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வழக்கமாக மேற்கு கால்வாய், கிழக்கு கால்வாய் மற்றும் யமுனை வழியாக திறந்து விடப்படும். ஆனால், வேண்டுமென்றே ஜூலை 9 மற்றும் ஜூலை 13 நாள்களுக்கிடையே தண்ணீரானது யமுனை வழியாக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. மேற்கு கால்வாய் மற்றும் கிழக்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் இதே குற்றச்சாட்டை நேற்று (ஜூலை 14) முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் 2 படத்தின் தமிழ் மொழிக் காட்சிகள் ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!!

தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு 3-வது குழந்தை!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிரத்னம் படக்குழு..! ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர்!

வீழ்ச்சிக்கு பிறகு... எழுச்சி பெற்ற பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

