

ஆஸ்திரேலியா கடற்கரையில் கடற்கன்னி வடிவிலான எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கடற்கன்னிகள் உண்மைதானோ என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பகுதியிலுள்ள கேப்பல் சான்ட்ஸ் என்ற கடற்கரையில் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மனித முகமும், மீன் உடலையும் போன்று அந்த எலும்புக்கூடு இருந்துள்ளது. இதைப் புகைப்படம் எடுத்து, போபி லீ என்ற 34 வயது பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மண்டை ஓடு மனித முகத்தைப்போன்று உள்ளது. மீன் உடல் போன்று உடலின் எலும்புகள் உள்ளன. இது எந்தவகையான உயிரினம் எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
இது கடற்கன்னி என்றும், நீங்கள் கடற்கன்னி எலும்புக்கூடை படமெடுத்துள்ளீர்கள் என்றும் அந்த புகைப்படத்துக்கு பலர் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.