நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கடற்கன்னிகள் உண்மையா? ஆஸி.யில் அரியவகை எலும்புகள்!!

ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடால், கடல் கன்னிகள் உண்மைதானோ என்ற சந்தேகம் அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2023, 3:56 pm IST

ஆஸ்திரேலியா கடற்கரையில் கடற்கன்னி வடிவிலான எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கடற்கன்னிகள் உண்மைதானோ என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பகுதியிலுள்ள கேப்பல் சான்ட்ஸ் என்ற கடற்கரையில் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
மனித முகமும், மீன் உடலையும் போன்று அந்த எலும்புக்கூடு இருந்துள்ளது. இதைப் புகைப்படம் எடுத்து, போபி லீ என்ற 34 வயது பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மண்டை ஓடு மனித முகத்தைப்போன்று உள்ளது. மீன் உடல் போன்று உடலின் எலும்புகள் உள்ளன. இது எந்தவகையான உயிரினம் எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். 

இது கடற்கன்னி என்றும், நீங்கள் கடற்கன்னி எலும்புக்கூடை படமெடுத்துள்ளீர்கள் என்றும் அந்த புகைப்படத்துக்கு பலர் கருத்துதெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.