தூத்துக்குடி - மும்பை விரைவு ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : தூத்துக்குடியில் இருந்து ஜூலை 23 காலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய தூத்துக்குடி - மும்பை விரைவு ரயில் (01144) 3 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை ரயில் தாமதம் காரணமாக, ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியே மும்பை செல்லும் ரயிலும் இன்று காலை தாமதமாக இயக்கப்பட்டது. காலை 8.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், மறுமார்க்கத்தில் இணை ரயில் வர தாமதமானதால், பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டது.