மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Updated on
1 min read

மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கியுள்ளன. 

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பிற்பகல் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய நிலையில் அவரது மைக் அணைக்கப்பட்டுள்ளது. மேலும் மசோதாக்கள் மீது விவாதம் தொடங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com