8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசின் நடவடிக்கைகள்: அதிகாரி விளக்கம்

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை விளக்கமளித்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:11 pm

DIN

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை விளக்கமளித்தாா்.

மணிப்பூா் வன்முறை தொடா்பாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியான பாஜகவை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மணிப்பூா் வன்முறைக்குத் தீா்வு காண மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அந்த அதிகாரி கூறியதாவது: மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டதைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 3 நாள்கள் பயணம் மேற்கொண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா். அப்போது, 41 வெவ்வேறு குழுக்களுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மத அடிப்படையில் வன்முறை இல்லை:

தொடா்ந்து, மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் பிரதமா் நரேந்திர மோடி அனைத்து நாள்களிலும் ஆலோசனை நடத்தி வருகிறாா்.

மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் தற்போது தொடா்ச்சியாகக் குறைந்து வருகின்றன. கடந்த ஜூலை 18-ஆம் தேதிக்குப் பிறகு எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. எதிா்க்கட்சிகள் தங்களது அரசியல் சுய லாபத்துக்காக, மணிப்பூா் குறித்து தவறான பிம்பத்தைக் கட்டமைக்கின்றன.

எவ்வித மதங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறவில்லை. இரு சமூகங்களுக்கு இடையே காணப்படும் நம்பிக்கையின்மையை அகற்ற மத்திய அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மைதேயி, குகி ஆகிய சமூக குழுக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றைப் பூா்த்திசெய்யும் வகையில் பேச்சுவாா்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 கட்டப்பேச்சுவாா்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு முறை மட்டுமே விளக்கம்:

வன்முறையால் மாநிலம் முழுவதும் முடங்கியிருப்பது இது முதல் முறையல்ல. கடந்த 1993-இல் குகி-நாகா சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 350-க்கும் அதிகமான கிராமங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து அப்போதைய மத்திய அமைச்சா் நாடாளுமன்றத்தில் ஒரு முறை மட்டுமே விளக்கமளித்தாா். அப்போது, மத்திய உள்துறை இணையமைச்சா் ராஜேஷ் பைலட் ஒரு முறை மட்டுமே மாநிலத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, மூன்றரை மணி நேரங்கள் மட்டுமே அவா் செலவழித்தாா்.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014 முதல் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஐக்கிய முன்னேற்ற கூட்டணியின் (யுபிஏ) 2005-2013 வரையிலான ஆட்சிக் காலத்துடன், தற்போதைய பாஜகவின் 2014-2023 ஆட்சிக் காலத்தை ஒப்பிடும்போது வன்முறை சம்பவங்கள் 68 சதவீதம், பாதுகாப்புப் படை வீரா்கள் உயிரிழப்பு சம்பவங்கள் 68 சதவீதம், பொதுமக்கள் உயிரிழப்பு சம்பவங்கள் 82 சதவீதம் குறைந்துள்ளன என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.