தில்லியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தலைநகர் தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு இடைவிடாது கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தலைநகர் தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு இடைவிடாது கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கோவா, மகாராஷ்டிரம், கடலோர கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தில்லியில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மேகமூட்டத்துடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை 25.8 டிகிரி செல்சியஸ் மழைப் பதிவாகியுள்ளன.
ஹிமாசல், உத்தரகண்ட், வடக்கு ஹரியாணா, சண்டிகர் மற்றும் உ.பி ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிக மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...