

தில்லியில் பேட்டரியைத் திருடியதாகக் கூறி சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடந்துள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள உஸ்மான்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் சிறுவன் அடிக்கப்படும் விடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிரேன் பேட்டரியை சிறுவன் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, அச்சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தற்போது நிகழ்ந்தது அல்ல, பழைய நிகழ்வு. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.