அமர்நாத்தில் கடந்த 30வது நாளில் 7000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.88 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
1,550 பேர் அடங்கிய புதிய குழு ஒன்று பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 1,165 ஆண்கள், 354 பெண்கள், 7 குழந்தைகள், 19 சாதுக்கள் மற்றும் 5 சாத்வீக்கள் புறப்பட்டுள்ளனர்.
62 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது.