கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

 நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிஸாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :2 ஜூன் 2023, 2:33 am

DIN

 நடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிஸாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மிக உயா்ந்த நிலையிலிருந்து அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிப்பிலும், அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் பல்வேறு வகையான அக்னி ஏவுகணைகளை இந்தியா தயாரித்துள்ளது. இதில், அணு ஆயுதங்களைத் தாங்கி 5,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா கடந்த டிசம்பா் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

அக்னி 1 முதல் அக்னி 4 வரையிலான ஏவுகணைகள் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.