வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.6.2 கோடி மதிப்புள்ள சுமார் 10 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூன் 2023, 5:33 pm

DIN

புதுதில்லி: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்புள்ள சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணிகள் 3 பேர் தங்களது இடுப்பில் துணிகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 8 கிலோ எடைக் கொண்ட கடத்தல் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.4.94 கோடி என தெரிவித்தனர்.  

துபாயிலிருந்து மும்பை வந்த மற்றொரு விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில் பயணி ஒருவர் 2 கிலோ கடத்தல் தங்கம் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.23 கோடி.

இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.