நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மக்கள் மருந்தகங்கள்: பிரதமர் மோடி பாராட்டு

நாடு முழுவதும் 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை (பிஎம்பிஜேபி) திறக்க அனுமதித்து மத்திய அரசு புதன்கிழமை முடிவு எடுத்துள்ளது

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2023, 9:23 pm

 நமது நிருபர்

நாடு முழுவதும் 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை (பிஎம்பிஜேபி) திறக்க அனுமதித்து மத்திய அரசு புதன்கிழமை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவால் மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட கிராமங்களில் கிடைத்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 2000 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களை (பிஎம்பிஜேபி) திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரம், உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
 இந்த முடிவு குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
 மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட நாடு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். மத்திய கூட்டுறவுத் துறையின் இந்த முக்கிய முயற்சி கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என அதில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 சாதாரண நோய்கள் முதல் நாள்பட்ட நோய்கள் வரையிலான அலோபதி மருந்துகளை, பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு பிஎம்பிஜேபி திட்டத்தைக் கொண்டுவந்தது. சுமார் 1,800 மருந்துகள், 285 மருத்துவ சாதனங்கள் இந்த மருந்தகங்களில் 50 முதல் 90 சதவீதம் வரை மலிவான விலையில் விற்கப்படுகின்றன.
 தற்போது நாடு முழுக்க 9,303 பிஎம்பிஜேபி மருந்தகங்கள் நகர்ப்புறங்களில் செயல்படுகின்றன. இவற்றை கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்த மத்திய மத்திய கூட்டுறவுத் துறையும் மத்திய மருந்தக துறையும் இணைந்து முடிவு எடுத்துள்ளன.
 இதன்படி, நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் முதல்கட்டமாக 1,000 பிஎம்பிஜேபி மருந்தகங்களும், பின்னர் டிசம்பர் மாதத்துக்குள் எஞ்சிய மேலும் 1000 பிஎம்பிஜேபி மருந்தகங்களும் நாடு முழுவதும் திறக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா கூட்டாக அறிவித்துள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.