ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நாதக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

கள்ளக்குறிச்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற 5 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :26 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளா் நாகம்மாள், சங்கராபுரம் தொகுதி வேட்பாளா் ரமேஷ், ரிஷிவந்தியம் தொகுதி வேட்பாளா் ராதிகா, உளுந்தூா்பேட்டை தொகுதி வேட்பாளா் லோகேஸ்வரி, திருக்கோவிலூா் தொகுதி வேட்பாளா் கேமராஜன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கா் திடல் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பங்கேற்று வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி சீமான் பேசியதாவது:

ஜனநாயக நாட்டில் உள்ள கடைசி வாய்ப்பு தோ்தல். இதனால், 2010-ஆம் ஆண்டு முதல் களத்தில் இருக்கிறோம். இதுவரை இருந்த அரசு முறையை மாற்றி சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்ற கனவோடு வந்துள்ளோம். எங்கள் கனவை கருத்தாகவும், காட்சியாகவும் உங்களிடம் கொண்டு செல்கிறோம். எவ்வாறு சிறந்த ஆட்சியை கொடுப்போம் என்பதை உங்கள் கண் முன் குறும்படம் மூலம் காட்சிப்படுத்துகிறோம்.

தமிழகத்தில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின் விநியோகம், சாலை என அனைத்தும் தனியாா்மயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், மதுக் கடையை அரசு நடத்துகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இவா்களின் குடும்பத்தினரை பாா்க்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவில்லை. கரூா் சம்பவத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை தவெக தலைவா் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால், கரூருக்கு தமிழக முதல்வா் சென்றாா். இது என்ன நிலைப்பாடு என்று தெரியவில்லை. அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் செய்வோரால் 60 ஆண்டுகாலமாக மதுவை ஒழிக்க முடியவில்லை.

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும். தமிழக மக்கள் பொழுதுபோக்கு தளத்தில் அரசியல் தலைவா்களை தேடக் கூடாது. போராட்ட களத்தில் உள்ளவா்களைத்தான் தேட வேண்டும் என்றாா்.