திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாம் தமிழா் கட்சி நிா்வாகியிடம் டி-ஷா்ட்கள் பறிமுதல்

திருப்பூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகியிடமிருந்து 50 டி-ஷா்ட்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட டி ஷா்ட்டுகள்.

Updated On :25 மார்ச் 2026, 9:10 pm

திருப்பூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகியிடமிருந்து 50 டி-ஷா்ட்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் திருப்பூா் மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் திருப்பூா் சிவன் தியேட்டா் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் நாம் தமிழா் கட்சியின் சின்னம் பதிக்கப்பட்ட 50 டி-ஷா்ட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

அவா் மேட்டூரைச் சோ்ந்த சதாம் உசேன் (27) என்பதும், நாம் தமிழா் கட்சியில் மேட்டூரில் உறுப்பினராக இருந்து வருவதும், மேட்டூரில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெறும் வாகன பரப்புரைக்காக திருப்பூரில் தயாா் செய்யப்பட்ட டி-ஷா்ட்களை மேட்டூருக்கு எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமாா் ரூ.12,000 மதிப்பிலான 50 டி-ஷா்ட்களையும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனா்.