புது தில்லி: இந்த ஆண்டில் அரபிக் கடலில் உருவாகியிருக்கும் முதல் பியலாக பிபர்ஜாய் புயல் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறவிருக்கிறது.
இந்த புயல் சின்னம் காரணமாக, மிக மெதுவாக, கேரளத்தில் மழைக்காலம் தொடங்குகிறது என்றும், தெற்கு தீபகற்பப் பகுதியில் கோடைக்காலம் பலமிழக்கலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் பிபர்ஜாய் புயலானது தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
காலை 8.30 மணி நிலவரப்படி, கோவாவிலிருந்து 890 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது.
இந்த புயல் சின்னம் தீவிரப் புயலாக மாறுவதால், நிலப்பரப்பில் பருவமழைக் காலம் தொடங்கி தீவிரமடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, தென்மேற்கு பருவமழை கேரளத்தில் ஜூன் 1ஆம் தேதி வாக்கில் தொடங்குவது வழக்கம். ஆனால், 7 நாள்கள் தாமதமாகத்தொடங்குகிறது. வழக்கமான தாமத தேதியையும் தாண்டி மேலும் 3 நாள்கள் தாமதமாக இந்த ஆண்டு பருவமழைத் தொடங்குகிறது.
பிபர்ஜாய் என்ற பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் டிஸாஸ்டர், தமிழில் பேரழிவு அல்லது பேரிடர் என்று பொருள். இது வெள்ளியன்று அதி தீவிர புயலாக மாறும் என்பதால், பெயருக்கு ஏற்றதுபோல பேரழிவை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

