ஒடிசாவில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து  விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுக்கியுள்ளனர். 

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், சரக்கு ரயில் பெட்டிகள் இருந்த இடத்தில் ஒதுங்கியுள்ளனர். அப்போது சரக்குப்பெட்டிகள் சரிந்து ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

முதலில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் இருவர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com