விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரைத் தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கதி!

அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரை கேள்வி கேட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :12 ஜூன் 2023, 10:57 am


அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரை கேள்வி கேட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பெங்களூருவில் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளனர். இறங்கும்போது ஆட்டோ ஓட்டுநர் இருமடங்கு கட்டணம் கேட்டுள்ளார். 

இதைத் தட்டிக் கேட்ட சகோதரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இது கைகலப்பாக மாறியுள்ளது. இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் வைத்திருந்த ஆயுதத்தால் இருவரையும் தாக்கியுள்ளார். 

இதில், அஹ்மத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் அயூப் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சையில் உள்ளார். 

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.