அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரை கேள்வி கேட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பெங்களூருவில் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளனர். இறங்கும்போது ஆட்டோ ஓட்டுநர் இருமடங்கு கட்டணம் கேட்டுள்ளார்.
இதைத் தட்டிக் கேட்ட சகோதரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இது கைகலப்பாக மாறியுள்ளது. இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் வைத்திருந்த ஆயுதத்தால் இருவரையும் தாக்கியுள்ளார்.
இதில், அஹ்மத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் அயூப் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

