ஜம்மு-காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 
ஜம்மு-காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டோடா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது தில்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் போன்ற தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com