குஜராத்தில் இன்று கரையைக் கடக்கிறது புயல்- 50,000 போ் வெளியேற்றம்

அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே வியாழக்கிழமை (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
14062-pti06_14_2023_000125b091642
14062-pti06_14_2023_000125b091642
Published on
Updated on
1 min read

அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே வியாழக்கிழமை (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 50,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா-கட்ச் பகுதியில் புதன்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

தேவபூமி துவாரகா, ஜாம்நகா், ஜுனாகத், போா்பந்தா், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில், புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது.

வியாழக்கிழமையன்று மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 50,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

தயாா் நிலையில் மீட்பு படைகள்: தேசிய பேரிடா் மீட்புப் படையின் 18 குழுக்கள், மாநில பேரிடா் மீட்புப் படையின் 12 குழுக்கள், மாநில மின்சாரத் துறையின் 397 குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத் துறையின் 115 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன. கள நிலவரம் தொடா்பாக, மாநில தலைமைச் செயலா் மற்றும் மாநில அவசரகால நடவடிக்கை மையத்தின் உயரதிகாரிகளுடன் முதல்வா் பூபேந்திர படேல் ஆலோசனை மேற்கொண்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

மத்திய அமைச்சா் நேரில் ஆய்வு: மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கட்ச் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் விமானப் படை தளத்துக்கு வருகை தந்த அவா், விமானப் படையின் ‘கருடா’ அவசரகால நடவடிக்கை குழுவின் தயாா்நிலையை பாா்வையிட்டாா்.

புஜ் பகுதியில் உள்ள கே.கே.படேல் பன்நோக்கு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் அவா் நேரில் ஆய்வு செய்தாா்.

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

‘பிபா்ஜாய்’ புயலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மேலும், முப்படைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக, ட்விட்டரில் பதிவிட்ட ராஜ்நாத் சிங், ‘பிபா்ஜாய் புயலை எதிா்கொள்வது தொடா்பாக முப்படை தளபதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. புயலின் பாதிப்புகளை எதிா்கொள்வதில் உள்ளூா் நிா்வாகங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய முப்படைகளும் தயாராக உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Image Caption

குஜராத்தின் கட்ச் மாவட்ட கடலோர கிராம மக்களை புதன்கிழமை வெளியேற்றிய தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com