அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் சுமாா் 29,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘தேமாஜி, திப்ரூகா், லகிம்பூா், பக்ஸா ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சுமாா் 29,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
லகிம்பூரில் மட்டும் சுமாா் 23,500 போ் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 215 ஹெக்டேரில் பயிா்கள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.