இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வெப்ப அலை: பாட்னாவில் பள்ளிகள் மூடல்!

வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :17 ஜூன் 2023, 4:21 am

DIN

வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பிகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

பாட்னா மாவட்டத்தில் ஏற்கெனவே வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூன் 18 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 24 வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.