வெப்ப அலை: பாட்னாவில் பள்ளிகள் மூடல்!

வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

வெப்ப அலை காரணமாக பிகார் மாநிலம் பாட்னாவில் வருகிற ஜூன் 24 வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. இந்நிலையில் பிகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

பாட்னா மாவட்டத்தில் ஏற்கெனவே வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூன் 18 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 24 வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com