அஸ்ஸாம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் 1,360 கிராமங்கள் -5 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் 1,360 கிராமங்கள் -5 லட்சம் போ் பாதிப்பு
Published on
Updated on
1 min read

அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உதல்குரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்ததாக, அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘பக்சா, பாா்பேடா, சிராங், திப்ரூகா், லக்கிம்பூா், சோனித்பூா், கோக்ரஜாா், உதல்குரி உள்பட 12 மாவட்டங்களில் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,95,700 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 14,091 ஹெக்டோ் அளவிலான பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன’ என்றனா்.

துணை ராணுவப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா், மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால படையினா், உள்ளூா் நிா்வாகத்தினா், தன்னாா்வ அமைப்பினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com