வெள்ள பாதிப்பு: அசாம் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை!

அசாமில் வெள்ளபாதிப்பு தொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். 
வெள்ள பாதிப்பு: அசாம் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை!


அசாமில் வெள்ளபாதிப்பு தொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். 

வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள மக்களை மீட்பது, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது உள்ளிட்ட பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் பாதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ போதுமான மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். 

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

10 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

16 மாவட்டங்களில் 54 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட 1, 538 கிராமங்களிலுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாயகட்டத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

பஜாலி, நல்பாரி, பர்பீட்டா, தம்லூர், பக்சா, கோஹல்பாரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 4.89 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com