தொடர் கனமழை காரணமாக ஹிமாசலப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
மணாலி - சண்டிகர் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், லாரி போன்ற கனரக வானங்களும், கார் வேன் போன்ற சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனங்களும் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று தொடர் மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மணாலி - சண்டிகர் செல்லும் நெடுஞ்சாலையில் அதிக அளவு மலைப்பகுதிகள் இருப்பதால், நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன நெரிசலில் சுற்றுலா சென்ற பயணிகளின் வாகனங்களும் சிக்கியுள்ளன. அருகில் விடுதிகளும் கடைகளும் இல்லாததால், சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்த போக்குவரத்து நெரிசலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கியிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 200க்கும் அதிகமான சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


