கஞ்சம் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்ததோடு, நிவாரணமும் அறிவித்துள்ளார்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஞாயிறன்று இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 10-க்கு மேற்பட்டோர் பலியாகினர், எட்டு பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து முதல்வரின் அலுவல அறிக்கையின்படி,
பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் பலியானோருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நிதியமைச்சர் விக்ரம் அருக், கஞ்சம் டிபிசிசி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ விக்ரம் பாண்டா ஆகியோர் உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


