மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கனத்த இதயத்தோடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை: குஜராத் நீதிபதி தீர்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ், பலாத்காரம் செய்ததாக இளைருக்கு குஜராத் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூன் 2023, 12:29 pm

DIN

வதோதரா: போக்சோ சட்டத்தின் கீழ், பலாத்காரம் செய்ததாக இளைருக்கு குஜராத் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 

பெண்ணின் சம்மதத்தோடு, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த விவகாரத்தில், பெண் வீட்டை விட்டு வெளியேறியபோது 17 வயதே ஆகியிருந்ததால், சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தபோய் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு மிகக் கனத்த இதயத்தோடுதான் தண்டனை விதிக்கப்படுகிறது, உயர்நீதிமன்றத்தைப் போல, சட்டத்தைத் தாண்டி குற்றவாளியை விடுதலை செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சைலேஷ் வசவாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் சம்மதத்தோடுதான் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதனால், குற்றவாளிக்கு தண்டனை வழங்கக் கூடாது. ஆனாலும் போக்சோ சட்டப்படி, தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் விவரம்..  2013ஆம் ஆண்டு 17 வயது சிறுமியும், வசவாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மகளை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விட்டதாக தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இதற்கிடையே, இருவருக்கும் முதல் குழந்தை பிறந்த பிறகு, கிராமத்துக்கு திரும்பியிருக்கிறார்கள். அப்போது வசவாவை காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். பிணையில் விடுதலையான பிறகும்,கிராமத்துக்கு வந்து, அந்தச் சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அபபோது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. 

ஆனால், தற்போது போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியாக இருந்த போது அவருடன் பாலியல் உறவு வைத்திருந்தக் குற்றத்துக்காக வசவாவுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு சிறுமியின் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

ஆனால், தற்போது கணவரும் குழந்தைகளும் வேண்டாம் என்று குடும்ப உறவிலிருந்து சிறுமி வெளியேறிவிட்டதால், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வசவாவுக்கே வந்துவிட்டதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வசவா தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

ஆனால், போக்சோ சட்டப்படி வசவாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கனத்த இதயத்தோடு வழங்கப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குற்றவாளிக்கு தண்டனை வழங்கினால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நீதிமன்றம் நன்கு அறிந்தே இருக்கிறது. ஆனால் கைகள் கட்டப்பட்டுள்ளதே என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை, அவர்களது குழந்தைகளுக்கு வழங்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.