திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உச்சம் காணும் பங்குச்சந்தைகள்: 19,100 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!

சென்செக்ஸ் 460.57 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,100 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :30 ஜூன் 2023, 7:03 am


சென்செக்ஸ் 460.57 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,100 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் தொடக்கத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

இன்று வெள்ளிக்கிழமை வர்த்தகம் 64.068 புள்ளிகளாகத் தொடங்கி சென்செக்ஸ் 460.57 புள்ளிகள் அதிகரித்து 64,311.54 என்ற புதிய வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 128.85 புள்ளிகள் உயர்ந்து 19,100 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், சன் பார்மாசூட்டிகள் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

அதேநேரத்தில் ஐசிஐசி வங்கி, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடாக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி லிமிடெட், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை இறக்கம் கண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.