மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன்சீனாவிலும் பறந்தது தடயவியல் ஆய்வில் உறுதி

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்), சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2023, 10:30 pm

DIN

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்), சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடுமையான நிலப்பரப்புகள் இன்றி மக்கள் அதிகம் வாழும் சமநிலப் பகுதிகளாக பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இச்சூழலைப் பயன்படுத்தி ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை இந்திய பகுதிக்குள் கடத்துவது அண்மைக் காலங்களில் தொடா்ந்து நடந்து வருகிறது.

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் அத்துமீறியதாக கடந்த ஆண்டில் மட்டும் 22 ஆளில்லா விமானங்கள் எல்லைப் பாதுகாப்பு படை(பி.எஸ்.எஃப்.) வீரா்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. எல்லைப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்படும் ஆளில்லா விமானங்களை ஆய்வுக்கு உள்படுத்தி தகவல்களைச் சேகரிப்பதற்காக பி.எஸ்.எஃப். சாா்பில் தலைநகா் தில்லியில் தடயவியல் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமிருதசரஸ் மாவட்டத்தின் ராஜாதால் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ாக கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை தடயவியல் ஆய்வுக்கு உள்படுத்திய போது அதிா்ச்சிகரமான தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த ட்ரோன், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பறந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், செப்டம்பா் முதல் டிசம்பா் வரையிலான 3 மாதங்களில் பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் 28 முறை பறந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.