நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: ஸ்டென்ட் பொருத்தி அறுவைசிகிச்சை

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு

Published On :7 பிப்ரவரி 2024, 12:08 pm IST

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆர்யா பட நடிகை சுஷ்மிதா சென் இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து, தனது இதயத்தில் ஸ்டென்ட் பொறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டகிராமில், உங்கள் இதயத்தை மகிழ்ச்சியுடனும் ஊக்கத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்களுக்கு எப்போது தேவைப்படுமோ அப்பொழுது உங்களுடன் துணை நிற்கும். (எனது தந்தை சென்சுபிரின் அற்புதமான வார்த்தைகள்)

ஒரு சில நாள்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது.. ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது.. மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.. எனக்கு மிகப்பெரியஇதயம் இருக்கிறது என்பதை.

உரிய நேரத்தில் உதவிய ஏராளமானோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது வேறொரு பதிவில் இடம்பெறும் என்றும் சுஷ்மிதா பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.