வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ராகுலின் கற்பனைக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்: பாஜக

பெகாசஸ் விவகாரத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகள் அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாக வேண்டும் என நினைப்பதை வெளிக்காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2023, 7:07 pm IST

பெகாசஸ் விவகாரத்தில் ராகுலின் குற்றச்சாட்டுகள் அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாக வேண்டும் என நினைப்பதை வெளிக்காட்டுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் கூறியதாவது: ராகுல் காந்தியின் கற்பனைகளுக்கு எல்லாம் நாங்கள் என்ன சொல்ல முடியும். அவர் சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டால், நாங்கள் அதனைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோம். மக்களும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அவரது தொலைபேசி உரையாடல்களைத் தெரிந்து கொள்ள யார் ஆர்வம் காட்டுவார்கள். 

பெகாசஸ் விவகாரத்தினை உச்சநீதிமன்றம் விசாரித்து முடித்துவிட்டது. உச்சநீதிமன்றம் வலியுறுத்திய போதிலும் பெகசாஸ் விசாரணையின்போது ராகுல் காந்தி அவரது தொலைபேசியினை கொடுக்கவில்லை. அவர் எதற்காகப் பயப்பட வேண்டும். அவரது தொலைபேசியில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது. அவர் ஏன் வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அந்த பிரச்னைகள் நடந்திருக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியை உருவாக்க விரும்புகிறார். இந்தியாவில் உள்ள மக்கள் விழித்துக் கொண்டதால் அவரால் இந்திய மக்களிடம் வாக்கினைப் பெற முடியவில்லை.  

வடகிழக்கில் பாஜக வெற்றி பெற்றுள்ளது பிரிவினைவாத அரசியலுக்கு மிகப் பெரிய அடியாக விழுந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டின் பிரிவினைவாத அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களது நோக்கம் அவர்களது வெறுப்பு பிரசாரங்களின் மூலம் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரை பாஜகவிடம் இருந்து விலக்கியே வைத்திருப்பதாகும். ஆனால், இந்த வெற்றி அவர்களுக்கு மிகப் பெரிய அடியாக விழுந்துள்ளது. பாஜக வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது. வளர்ச்சிக்கு எந்த ஒரு மதமும் கிடையாது. சிறுபான்மையினர் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையே வடகிழக்கில் அதன் வெற்றிக்கு காரணம். பிரதமர் நரேந்திர மோடி வெறும் வார்த்தையாக சொல்பவர் மட்டுமல்ல, அவர் செய்து காட்டுபவர்.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் வயநாடு தொகுதியில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இடதுசாரிகளுடன் ராகுல் காந்தி கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரிவுகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றங்களை நிறுத்தி வைப்பதில் ஆர்வம் காட்டுகிறது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்குகள் போன்றன நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


வடகிழக்கு மாநிலங்களின் தேர்தலை சிறிய மாநிலங்களின் தேர்தல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார். இது போன்ற கருத்துகள் காங்கிரஸ் குறித்து மக்களுக்கு புரிய வைக்கிறது. வடகிழக்கில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக காங்கிரஸ் வடகிழக்கு மாநிலங்களை இரண்டாம் தரமாக நடத்தியது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்கில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படுள்ளது என்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, அவர் உட்பட பல அரசியல் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.