மும்பையில் கடற்படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர், மும்பை கடற்கரைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியது.
மும்பையில் கடற்படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்


புது தில்லி: இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர், மும்பை கடற்கரைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கியது.

ஹெலிகாப்டரில் இருந்த மூன்று கடற்படை வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மும்பை கடற்கரைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயல்பட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதால், மூன்று வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com