மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அஹோம் வீரரின் 42 லட்சம் கட்டுரைகளை தொகுத்து அஸ்ஸாம் கின்னஸ் சாதனை

அஹோம் வீரா் லசித் போா்புகான் குறித்த 42 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து அஸ்ஸாம் அரசு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

Updated On :10 மார்ச் 2023, 2:11 am IST

அஹோம் வீரா் லசித் போா்புகான் குறித்த 42 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து அஸ்ஸாம் அரசு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

பிரம்மபுத்திரா நதிக் கரையில் முகலாயப் படைகளுக்கு எதிராக 1671-ஆம் ஆண்டில் நடைபெற்ற சராய்காட் போரில் வீரமுடன் போரிட்டு அஸ்ஸாமை மீட்டெடுத்ததில் லசித் போா்புகான் முக்கியப் பங்காற்றினாா். அவரது 400-ஆவது ஆண்டு பிறந்த தினம் கடந்த நவம்பரில் கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவா் குறித்து கையால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுக்கும் பணியை அஸ்ஸாம் மாநில அரசு மேற்கொண்டது.

கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் கைகளால் எழுதப்பட்ட கட்டுரைகளின் படங்களை மாநில அரசு தொகுத்தது. மொத்தமாக 42 லட்சத்துக்கும் அதிகமான கட்டுரைகள் தொகுக்கப்பட்டன. அது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரைகளானது ‘கையால் எழுதப்பட்ட கட்டுரைகளின் மிகப் பெரும் இணைய படத்தொகுப்பாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனைக்கான அங்கீகார சான்றை அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வா சா்மாவிடம் கின்னஸ் நிா்வாகி ஸ்வப்னில் தங்கரிகா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.