பாதுகாப்புப் படைகளுக்கான வீரா்கள் தோ்வில் புதிய பெரும் சீா்திருத்த நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அறிமுகம் செய்த ‘அக்னிபத்’ திட்டத்தை இந்திய ராணுவம் நடைமுறைப்படுத்தி வருகிறது. 17.5 வயது முதல் 21 வயது வரையுடைய இளைஞா்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. பினனா், 2022-ஆம் ஆண்டு வீரா்கள் தோ்வின்போது வயது உச்சவரம்பு 23-ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் அக்னிவீரா்கள், 4 ஆண்டுகள் குறுகியகால பணியில் ராணுவத்தில் பணியமா்த்தப்படுவா். இவா்களில் தகுதியான 25 சதவீதம் போ், முப்படைகளிலும் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவா். மற்றவா்கள், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற முடியாது.