சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரயில்வேக்கு சொந்தமில்லாத ஒரே ஒரு வழித்தடம்

வந்தே பாரத் என உலக தரத்துக்கு ரயில் சேவையை வழங்குவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2023, 12:28 pm

DIN

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே, மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது, மெட்ரோ ரயில், வந்தே பாரத் என உலக தரத்துக்கு ரயில் சேவையை வழங்குவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வழித்தடங்களை கொண்டு, எண்ணற்ற ரயில்களை இயக்கும் இந்திய ரயில்வே பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால், இவ்வளவு இருந்தும் கூட, இந்திய நாட்டில், ரயில்வேக்கு அல்லது நாட்டுக்கு சொந்தமாகாத, இன்னமும் பிரிட்டிஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும் ஒரு ரயில்வழித்தடம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறது.

ஆம், மகாராஷ்டிர மாநிலத்தில் யவத்மால் - முர்திஜாபூர் இடையேயான 190 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட வழித்தடம் ஷாகுந்தலா ரயில்வேக்கு சொந்தமானதாக உள்ளது. இது பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் கட்டமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயில் போக்குவரத்து, 1952ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது, இந்த வழித்தடத்தை நாட்டுடைமை ஆக்க அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டிருந்தது.

19ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பாதையில் ரயில்களை இயக்கி வரும் நிறுவனம், தற்போதும் அதனை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க பிரிட்டிஷ் நிறுவனத்துக்கு இந்தியா ஒரு கோடி ரூபாயை இயக்கக் கட்டணமாக செலுத்தி வருகிறதாம். 1910ஆம் ஆண்டில் இந்த ஷாகந்தலா ரயில்வே நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு இரு மார்கத்திலும் தலா ஒரு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. அம்ராவதி மாவட்டத்தில் உள்ள யவத்மால் மற்றும் அசல்பூர் இடையே இயக்கப்படும் ரயில் பயணமானது 20 மணி நேரம் எடுக்கும். இதற்கான கட்டணம் ரூ.150 வசூலிக்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.