டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குருகிராம்: வெளிநாட்டு இ-சிகரெட் விற்பனை செய்த நபர் கைது

குருகிராமில் ரூ.7 முதல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக 50 வயது நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:45 am

DIN

குருகிராம்: குருகிராமில் ரூ.7 முதல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக 50 வயது நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

முதல்வர் பறக்கும் படை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு இன்று குருகிராமில் உள்ள வியாபர் கேந்திரா, சுஷாந்த் லோக் பேஸ் -1ல் அமைந்துள்ள கடை எண் 89, ஜெயின் சுபாரியில் சோதனை நடத்தியது.

குற்றம் சாட்டப்பட்டவர் தில்லி கான்பூரைச் சேர்ந்த ராஜேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பல்வேறு பிராண்டுகளின் இ-சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக முதல்வரின் பறக்கும் படை அதிகாரி ஹரீஷ் கூறியதாவது: 

அனுமதியின்றி சட்டவிரோதமாக இ-சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, நாங்கள் சம்பவ இடத்தை சோதனை செய்து தடைசெய்யப்பட்ட பொருட்களுடன் குற்றவாளியை கைது செய்தோம்.

இவர், தில்லியிலிருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்கி, கடந்த ஆறு மாதங்களாக சட்ட விரோதமாக வியாபாரம் செய்து, கடைக்கு மாத வாடகையாக, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்திருக்கிறார்.

குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் அவர் மீது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டம் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.