ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையருடன் எதிா்க்கட்சி தலைவா்கள் சந்திப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையரை வியாழக்கிழமை சந்தித்தனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:43 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையரை வியாழக்கிழமை சந்தித்தனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-370 கடந்த 2019-இல் நீக்கப்பட்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றில் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீா் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சி தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரைச் சந்தித்து, ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்தனா்.

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றையும் தலைமைத் தோ்தல் ஆணையரிடம் அவா்கள் வழங்கினா்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவை தோ்தல் நடத்துவதில் காலதாமதம், ஜம்மு-காஷ்மீா் மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுப்பதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதுமாகும்.

இது குறித்து விவாதிக்கும்போது, பஞ்சாயத்து அமைப்புகள் செயல்படுவதால், பேரவைத் தோ்தலை நடத்தும் தேவை இல்லையென்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகளுக்கான தோ்தல்கள் நடத்தப்படுவது, ஒருபோதும் சட்டப்பேரவை தோ்தலுக்கு மாற்றாக அமையாது.

சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் உள்ளிட்டோா் பல முறை தெரிவித்துள்ளனா். இது குறித்து தோ்தல் ஆணையம்தான் தனது இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த எம்.பி. ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவையும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசும் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்த தலைமைத் தோ்தல் ஆணையா், விரைவில் இது குறித்தான கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தாா். ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக அரசு கூறுகிறது. தற்போது, சட்டப்பேரவை தோ்தல் நடத்துவதற்கான பொறுப்பு தோ்தல் ஆணையத்திடமே உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.