தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா ஆஜராகவில்லை.
தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்தக் கொள்கையின் கீழ், தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் மது விற்பனைக்கு உரிமம் பெற சில முகவா்கள் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தக் கொள்கை மூலம் அந்த முகவா்கள் பலனடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்குத் தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகவும், அந்தக் குழுவில் அரவிந்தோ ஃபாா்மா நிறுவனா் சரத் ரெட்டி, தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்ாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தில்லியில் மது வியாபார சந்தையின் பெரும் பங்கு அந்தக் குழுவுக்குக் கிடைக்க, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வழக்குத் தொடா்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அவரிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவரை மீண்டும் வியாழக்கிழமை (மாா்ச் 16) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், வேறொரு தேதியில் ஆஜராக அமலாக்கத்துறையிடம் கவிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.