தேஜஸ்வி யாதவ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மனீந்தா் சிங், ‘ பிகாா் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப்ரல் 5-ஆம் தேதி முடிவடைவதால், பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவோ அல்லது ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்டவை தனது தரப்பிலானவா்கள் மூலம் தில்லியில் சமா்ப்பிக்கவோ அனுமதிக்க வேண்டும் என தேஜஸ்வி யாதவ் சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் ஒருவா் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்துக்குச் சென்ற நிலையில், அங்கு அவா் கைது செய்யப்பட்டாா். இதே போன்று தேஜஸ்வி யாதவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம்’ என்றாா்.