கர்நாடக தேர்தல்: பொம்மை, சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குப்பதிவு

கர்நாடக தேர்தல்: பொம்மை, சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா, எச்.டி.குமாரசுவாமி உள்ளிட்டோர் குடும்பத்துடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.

மேலும், நடிகர் பிரகாஷ் ராஜ், உபேந்திர ராவ், ரமேஷ் அரவிந்த், நடிகை அமுல்யா, தொழிலதிபர் இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com