விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேற்குவங்க ஆளுநர் மாளிகை அருகே பயங்கர தீ விபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை அருகே இருந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image
கோப்புப் படம்.
Updated On :10 மே 2023, 9:12 am

DIN


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை அருகே இருந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.

ஐந்து அடுக்குகளைக் கொண்ட சரஃப் மாளிகை வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்துநேரிட்டு, அது அந்த கட்டடம் முழுவதும் பரவியது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 55 மீட்டர் ஹைட்ராலிக் ஏணியில் ஏறி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வளாகத்தில் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், குடியிருப்புகள் அமைந்திருந்ததாகவும், இதுவரை விபத்தில் யாரும் பலியானதாகத் தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.