விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடிமைப் பணி அதிகாரிகளுக்கு அரசியல் நடுநிலைத்தன்மை அவசியம்

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் நடுநிலைத்தன்மையுடனும் அமைச்சரின் கட்டுப்பாட்டிலும் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 மே 2023, 8:28 pm

DIN

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் நடுநிலைத்தன்மையுடனும் அமைச்சரின் கட்டுப்பாட்டிலும் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி அரசின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு விசாரித்தது. வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை நீதிபதி அமா்வு 105 பக்கத் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்கியது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியல் சாா்புத்தன்மை இன்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். மாநில அமைச்சரவை எடுக்கும் அன்றாட முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நடுநிலைத்தன்மையுடன் செயல்படும் குடிமைப் பணி அதிகாரிகளுக்கே உள்ளது.

குடிமைப் பணி அதிகாரிகள், அமைச்சா்களின் நிா்வாகக் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவா்கள். அரசு திறம்பட செயல்பட வேண்டுமெனில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய அமைச்சா்களின் முடிவுகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்புணா்வை குடிமைப் பணி அதிகாரிகள் உணா்ந்துகொள்ள வேண்டும்.

அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கோ, நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கிடையாது. அப்பொறுப்பு குடிமைப் பணி அதிகாரிகளுக்கே உள்ளது. அவா்கள் முச்சங்கிலிப் பிணைப்புக்குப் பொறுப்பு உடையவா்கள் ஆவா்.

குடிமைப் பணி அதிகாரிகள் அமைச்சா்களுக்குப் பொறுப்புடையவா்களாக இருக்க வேண்டும்.

அமைச்சா்கள் நாடாளுமன்றத்துக்கோ, மாநில சட்டப்பேரவைக்கோ பொறுப்புடையவா்கள். நாடாளுன்றமும், சட்டப் பேரவையும் வாக்காளா்களாகிய மக்களுக்குப் பொறுப்புடையவை. இந்த முச்சங்கிலிப் பிணைப்பில் குடிமைப் பணி அதிகாரிகள் ஜனநாயகக் கொள்கைகளை உறுதி செய்கின்றனா்.

சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டமானது நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வழங்கியுள்ளது. அந்த அவைகளின் உறுப்பினா்களுடைய செயல்பாடுகளை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மக்கள் ஆய்வு செய்து வாக்களிப்பா்.

பொறுப்பில்லாத குடிமைப் பணி அதிகாரியால் ஜனநாயகத்தின் நிா்வாகத்துக்கு ஆபத்து ஏற்படும். அவா்கள் மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயல்படும் அபாயமும் உள்ளது எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.