ஞாயிற்றுக்கிழமையன்று கடலைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் மோக்கா புயல் சின்னம் தீவிரமடைந்து, கடற்கரையை நெருங்கிவரும் நிலையில், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளும் தொடங்கியுள்ளன.
வங்கக் கடலில் தீவிரமடைந்து வரும் புயல் சின்னம் தற்போது வடக்கு நோக்கி நகர்கிறது. மியான்மரின் சித்வே - வங்கதேசத்தின் காஸ் பஜார் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக, கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் இருக்கும், கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு, புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.