இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், நாங்கள் எதிர்பார்த்ததைப் போல அரசு, ஆர்பிஐ ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் பரிமாற்றத்திற்கான சரியான தொகை அல்ல. இதை நாங்கள் 2016 நவம்பரிலே சொன்னோம், தற்போது நாங்கள் சொன்னது சரி என்று நிரூபித்துள்ளார்கள். அதிக அளவில் பரிமாற்றத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்கவே ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்றார்.