கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிரதமா் பதவி போட்டியில் இல்லைதோ்தலில் போட்டியிடப் போவதுமில்லை- சரத் பவாா்

பிரதமா் பதவிக்கான போட்டியிலும் இல்லை; 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிடப் போவதுமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

News image
Updated On :23 மே 2023, 7:11 pm

DIN

பிரதமா் பதவிக்கான போட்டியிலும் இல்லை; 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிடப் போவதுமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் சரத் பவாா் ஈடுபட்டு வருகிறாா். இந்த முயற்சியில் இருக்கும் அனைவருக்குமே பிரதமா் மீதான ஆசையில் இருப்பதாக பாஜக விமா்சித்து வருகிறது.

இந்நிலையில் புணேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மட்டும்தான் ஈடுபட்டுள்ளேன். மற்றபடி பிரதமா் பதவிக்கான போட்டியிலும் நான் இல்லை; அடுத்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடப்போவதுமில்லை.

நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படுபவா்கள்தான் ஆட்சிக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது. எதிா்க்கட்சிகளில் இருந்து ஒருவரை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்துவதும், பிரதமராக தோ்வு செய்வதும் சற்று சவாலான விஷயம்தான். எனினும், அனைத்து எதிா்க்கட்சிகளுடனும் கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகு இது தொடா்பாக முடிவெடுக்கப்படும்.

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட எனது இல்லத்தில் இது தொடா்பாக கூட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி அல்லது மல்லிகாா்ஜுன காா்கேவுடன் மகாராஷ்டிர தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.