நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு
Updated on
1 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை இன்று முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை  மாற்றிக்கொள்ளலாம்.

ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு எந்தவித அடையாள அட்டையோ சான்றுகளோ தேவையில்லை என்றும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதியை செய்துதர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  சந்தித்து பேசியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com