சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி!

திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்யேந்திர ஜெயின்
சத்யேந்திர ஜெயின்

தில்லி: திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தில்லி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு சிறையில் உள்ள குளியலறை சென்றபோது வழுக்கி கீழே விழுந்ததில் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com