கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காற்று மாசு: தில்லியில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை

தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வருகிற நவ. 13 முதல் நவ. 20 ஆம் தேதி வரை வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

News image

காற்று மாசினால் புகை சூழ்ந்த நிலையில் தாஜ்மஹால்.

Updated On :6 நவம்பர் 2023, 11:43 am

DIN

தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வருகிற நவ. 13 முதல் நவ. 20 ஆம் தேதி வரை அங்கு வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

தில்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து காற்று மாசைக் குறைக்க தில்லி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தில்லியில் இன்று(திங்கள்கிழமை) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் முக்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதன்படி, தில்லியில் வருகிற நவம்பர் 13 முதல் 20 ஆம் தேதி வரை பதிவெண்கள் அடிப்படையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

Story image

காரின் ஒற்றை பதிவெண்கள், இரட்டை பதிவெண்கள் என்ற முறையில் கார்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். அதாவது காரின் கடைசி இலக்க எண் ஒற்றை எண் கொண்ட கார்கள் ஒருநாளும், இரட்டை எண் கொண்ட கார்கள் மற்றொரு நாளும் அனுமதிக்கப்படும். 

மேலும், தில்லியில் கட்டடப் பணிகள் எதுவும் நடக்க இப்போது அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். 

அதுபோல 10, 12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாறாக, அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

காற்று மாசு தொடர்பான இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி 'கடுமையான பிரிவில்' உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.